என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சச்சின் டெண்டுல்கர்"
- துருவ நட்சத்திரம் படத்திற்கான விளம்பர பணிகளில் கவுதம் வாசுதேவ் மேனன் ஈடுபட்டுள்ளார்.
- தனது அடுத்த படம் குறித்த புதிய தகவலை கவுதம் மேனன் தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில், துருவ நட்சத்திரம் படத்திற்கான விளம்பர பணிகளுக்காக அவர் மும்பை சென்றிருக்கிறார். இன்று நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதி போட்டியின் போது தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவுதம் வாசுதேவ் மேனன், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அதன்படி நடிகர் ஆர்.ஜே. பாலாஜி கேட்ட கேள்விக்கு பதில் அளித்த கவுதம் வாசுதேவ் மேனன், கிரிக்கெட்டை மையமாக கொண்டு புதிய படம் இயக்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். மேலும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் காம்ப்ளியை அடிப்படையாக வைத்து இந்த படத்தின் கதையை உருவாக்கி இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
- இளைஞன் "விராட்" எனும் வீரராக உருவெடுத்ததில் மகிழ்ச்சி.
- சச்சின் டெண்டுல்கர் விராட் கோலிக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து உள்ளார்.
உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி, இன்று (நவம்பர் 15) சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது சதத்தை விளாசி சரித்தர சாதனை படைத்திருக்கிறார்.
ஒருநாள் போட்டிகளில் 50-வது சதம் அடித்த விராட் கோலிக்கு முன்னாள் வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், சச்சின் டெண்டுல்கர் விராட் கோலிக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து உள்ளார்.
இது குறித்த எக்ஸ் பதிவில், "முதல் முறை இந்திய டிரெசிங் ரூமில் உன்னை பார்த்தேன், நீ என் காலில் விழுந்ததை சக வீரர்கள் நக்கலடித்தனர். அன்று என்னால் எனது சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், உனது திறமை மற்றும் ஆர்வத்தால் நீ விரைவிலேயே என் மனதை தொட்டுவிட்டாய். ஒரு இளைஞன் "விராட்" எனும் வீரராக உருவெடுத்து இருப்பதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்."
"ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததில் எனக்கு மகிழ்ச்சி அதிகம் தான், அதுவும் இத்தனை பெரிய போட்டி- உலகக் கோப்பை அரையிறுதியில்- எனது ஹோம் கிரவுண்டில் முறியடித்தது கேக் மீது ஐஸ் வைத்ததை போன்று இருந்தது," என்று குறிப்பிட்டுள்ளார்.
The first time I met you in the Indian dressing room, you were pranked by other teammates into touching my feet. I couldn't stop laughing that day. But soon, you touched my heart with your passion and skill. I am so happy that that young boy has grown into a 'Virat' player. I… pic.twitter.com/KcdoPwgzkX
— Sachin Tendulkar (@sachin_rt) November 15, 2023
- ஒரு உலக கோப்பையில் அதிக ரன் எடுத்தது சாதனை படைத்தவர் டெண்டுல்கர்.
- டெண்டுல்கரின் இந்த சாதனையையும் விராட்கோலி முறியடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட்கோலி இந்த உலக கோப்பையில் மிகவும் அபாரமாக விளையாடி வருகிறார்.
நெதர்லாந்துக்கு எதிராக அவர் அரைசதம் அடித்தார். 51 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த உலக கோப்பையில் அவர் 5-வது அரைசதம் எடுத்தார். 2 செஞ்சூரியும் அடித்து இருந்தார்.
விராட்கோலி 7-வது முறையாக 50 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளார். இதன் மூலம் டெண்டுல்கர், சகீப்-அல்-ஹசன் (வங்காள தேசம்) சாதனையை கோலி சமன் செய்தார். டெண்டுல்கர் 2003 உலக கோப்பையிலும் (1 சதம் + 6 அரைசதம்), சகீப்-அல்-ஹசன் 2019 உலக கோப்பையிலும் (2 சதம் + 5 அரைசதம்) 7 முறை 50 ரன்னுக்கு மேல் எடுத்து இருந்தனர்.
நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் 50 ரன்னுக்கு மேல் எடுத்தால் கோலி புதிய சாதனை படைப்பார்.
மேலும் இந்த உலக கோப்பை தொடரில் அதிக ரன் எடுத்து முதல் இடத்தில் இருந்து குயின்டன் டி காக்கையும் (தென்ஆப்பி ரிக்கா) கோலி முந்தினார்.
அவர் 9 ஆட்டங்களில் 594 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். 3 போட்டியில் அவுட் இல்லை என்பதால் சராசரி 99 ஆகும். குயின்டன் டி காக் 4 சதத்துடன் 591 ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். அதற்கு அடுத்தப்படியாக ரச்சின் ரவீந்திரா 565 ரன்னும், ரோகித்சர்மா 503 ரன்னும் எடுத்துள்ளார்.
ஒரு உலக கோப்பையில் அதிக ரன் எடுத்தது சாதனை படைத்தவர் டெண்டுல்கர். அவர் 2003 உலக கோப்பையில் 673 ரன்கள் எடுத்தார். டெண்டுல்கரின் இந்த சாதனையை விராட்கோலி முறியடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு இன்னும் 80 ரன் தேவை. இதேபோல டி காக்கும் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பில் உள்ளார்.
- முன்னாள் வீரர் சச்சினின் சாதனையை கோலி சமன் செய்தார்
- 2008ல் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக கோலி ஏலத்தில் தேர்வானார்
இந்தியாவில், அக்டோபர் 5 அன்று தொடங்கிய ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டி தொடர் பரபரப்பாக நடைபெறுகிறது.
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் இந்த போட்டித்தொடரில், தற்போது நடைபெறுவது 13-வது தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 19 அன்று இத்தொடரின் இறுதி போட்டி நடைபெற உள்ளது.
இத்தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 49 சதங்களை அடித்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார்.
இன்று கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரூவில் உள்ள சின்னசாமி விளையாட்டு மைதானத்தில் இந்தியாவிற்கும் நெதர்லாந்திற்கும் முக்கியமான போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில், விராட் கோலி அடித்த 49 சதங்களை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் அந்த அரங்கிற்கு செல்லும் வழி நெடுக கோலியின் முதல் சதத்தில் இருந்து அவரது 49-வது சதங்களையும் குறிப்பிடும் விதமாக 49 கட்-அவுட்களை வைத்துள்ளனர்.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
டெல்லியில் பிறந்து வளர்ந்தவர், விராட் கோலி.
கடந்த 2008ல், ஐ.பி.எல். (IPL) 20 ஓவர்கள் போட்டிக்கான அணிகளில், பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக இவர் ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டார். அதிலிருந்து கோலிக்கு கர்நாடகாவில் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Karnataka: ICC Men's Cricket World Cup | Ahead of India Vs Netherlands, 49 cut-outs of Indian cricketer Virat Kohli showing his 49 centuries, put up at M Chinnaswamy Stadium in Bengaluru. pic.twitter.com/ixA4dy2J6n
— ANI (@ANI) November 12, 2023
- இம்ராகிம் சதம் ஆப்கானிஸ்தானை நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றது.
- 70 ஓவர்கள் வரை ஆப்கானிஸ்தான் சிறந்த ஆட்டத்தை விளையாடியது.
ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் இப்ராகிம் சட்ரன் ஆட்டமிழக்காமல் 143 பந்தில் 129 ரன்கள் விளாசினார். இதனால் ஆப்கானிஸ்தான் 291 ரன்கள் குவித்தது.
பின்னர் 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்கத்தில் அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 18.3 ஓவரில் 91 ரன்கள் எடுப்பதற்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் நிலையில் இருந்தது. அதன்பின் மேக்ஸ்வெல் (128 பந்தில் 21 பவுண்டரி, 10 சிக்ஸ் உடன் 201*) ருத்ரதாண்டவம் ஆட ஆஸ்திரேலியா 46.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்த போட்டி குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இப்ராகிம் சட்ரனின் அற்புதமான சதம், ஆப்கானிஸ்தானை சிறந்த நிலையில் வைத்திருந்தது. அவர்கள் 2-வது பாதி ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை தொடங்கி, 70-வது ஓவர் வரை சிறந்த கிரிக்கெட்டை விளையாடினார்கள். ஆனால், கடைசி 25 ஓவர்களில் மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டம், அவர்களின் அதிர்ஷ்டம் மாறுவதற்கு போதுமானதாக இருந்தது.
மேக்ஸ் நெருக்கடியில் இருந்து மேக்ஸ் அதிரடி! எனது வாழ்க்கையில் நான் பார்த்த சிறந்த ஒருநாள் ஆட்டம் (மேக்ஸ்வெல் இரட்டை சதம்).
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- ஒவ்வொரு போட்டியின் முடிவில் சிறந்த பீல்டர் விருது வழங்கப்படுகிறது.
- முதல் விருதை விராட் கோலி பெற்றார்.
மும்பை:
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - இலங்கை அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி, கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத இலங்கை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி புதிய பாணியை கடைபிடித்து வருகிறது. அது ஒவ்வொரு போட்டியின் முடிவில் சிறந்த பீல்டர் விருது வழங்குவதாகும். முதல் விருதை விராட் கோலி பெற்றார். அதனை தொடர்ந்து ஷர்துல் தாகூர், கேஎல் ராகுல், ஜடேஜா, ஷ்ரேயாஸ் ஐய்யர் என பலரும் பெற்றனர்.
ஒவ்வொரு முறையும் வித்தியசமான முறையில் விருது வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்த பீல்டிங் பயிற்சியாளர் இந்த முறையும் வித்தியாசமான முறையில் விருது வழங்கியுள்ளார்.
இந்த முறை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சிறந்த பீல்டர் விருதை அறிவித்தார். இலங்கை அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளீர்கள். இந்த ஆட்டத்தை தொடருங்கள் என பாராட்டிய அவர், இறுதியில் சிறந்த பீல்டர் விருது இந்த முறை ஷ்ரேயாஸ் ஐய்யர் வழங்கப்படுகிறது என கூறினார்.
இதனை கேட்ட ஷ்ரேயாஸ் துள்ளி குதித்து மகிழ்ச்சியை கொண்டாடினார். 2-வது முறையாக அவர் இந்த விருதை தட்டிச் சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The wait is over ? #INDvsSL . This time it was motivational for the team as master #SachinTendulkar came to announce the medal. Andd it again passes by #KLRahul to #ShreyasIyer ??#IndiavsSriLanka#MedalOfHonor #iyer #virat #INDvSL . pic.twitter.com/MkAUntl3e2
— MSD Universe (@UniverseMSD) November 3, 2023
- 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா.
- இந்த போட்டியில் விராட் கோலி 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய இலங்கை அணி 55 ரன்னில் சுருண்டது. இதனால் 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சதம் அடித்து சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விராட் கோலி 88 ரன்னில் ஆட்டமிழந்தார். சதத்தில் சாதனை படைக்கவில்லை என்றாலும் ஒரு ஆண்டில் அதிக முறை ஆயிரம் ரன் எடுத்த சச்சினின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.
விராட் கோலி 34 ரன்னில் இருந்த போது இந்த ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை கடந்தார். 2023-ம் ஆண்டில் இந்தியாவின் சுப்மன் கில் (1,426 ரன்), இலங்கையின் நிசாங்கா (1,108 ரன்), இந்திய கேப்டன் ரோகித் சர்மா (1,060 ரன்) ஆகியோருக்கு பிறகு ஆயிரம் ரன்களை கடந்தவர் கோலி (23 ஆட்டத்தில் 1,054 ரன்) தான்.
கோலி ஓராண்டில் ஆயிரம் ரன்னுக்கு மேல் எடுப்பது இது 8-வது முறையாகும். ஏற்கனவே 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளிலும் இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறார். இதன் மூலம் ஓராண்டில் அதிக முறை ஆயிரம் ரன்களை அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை (7 முறை) முறியடித்தார்.
- வான்கடே ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள டெண்டுல்கர் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது.
- சிலை திறப்பு விழாவில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமைக்குரியவர். மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக தனது 200-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய டெண்டுல்கர் அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.
'சாதனை நாயகன்', 'கிரிக்கெட் கடவுள்' என்று வர்ணிக்கப்படும் டெண்டுல்கரை பெருமைப்படுத்தும் வகையில் மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள கேலரியின் ஒரு பகுதிக்கு டெண்டுல்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் டெண்டுல்கர் தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினாா். டெண்டுல்கரின் பொன்விழாவை கொண்டாடும் வகையில் வான்கடே மைதானத்தில் அவர் பெயர் சூட்டப்பட்ட பார்வையாளர் கேலரி அமைந்து உள்ள பகுதியில் அவருக்கு சிலை வைக்க மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. இதையடுத்து அங்கு டெண்டுல்கரின் முழு உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது.
The Good of Cricket ♥️ Sachin Tendulkar.#SachinTendulkarpic.twitter.com/YYa9rNDgFB
— BharatCricket (@BharatEcricket) November 1, 2023
இந்நிலையில் வான்கடே ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள டெண்டுல்கர் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது.
சிலை திறப்பு விழாவில் டெண்டுல்கர், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, சரத் பவார், ராஜூவ் சுக்லா, பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த ஏப்ரல் மாதம் டெண்டுல்கர் தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினாா்.
- வான்கடே ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள டெண்டுல்கர் சிலை இன்று திறந்து வைக்கப்படுகிறது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் அதிக ரன் குவித்தவர் உள்பட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமைக்குரிய டெண்டுல்கர் மும்பையை சேர்ந்தவர் ஆவார். மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி முடிவடைந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக தனது 200-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய டெண்டுல்கர் அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.
Sachin Tendulkar statue is set to be unveiled tomorrow.
— We Miss You SACHIN (@WeMissYouSachin) October 31, 2023
The God of cricket...!!!!#SachinTendulkar #CricketTwitter pic.twitter.com/zZNv4Yt9S7
அவர் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 51 சதங்களுடன் 15, 921 ரன்னும், 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 49 சதங்களுடன் 18,426 ரன்களும் குவித்துள்ளார். 'சாதனை நாயகன்', 'கிரிக்கெட் கடவுள்' என்று வர்ணிக்கப்படும் டெண்டுல்கரை பெருமைப்படுத்தும் வகையில் மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள கேலரியின் ஒரு பகுதிக்கு டெண்டுல்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் டெண்டுல்கர் தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினாா். டெண்டுல்கரின் பொன்விழாவை கொண்டாடும் வகையில் வான்கடே மைதானத்தில் அவர் பெயர் சூட்டப்பட்ட பார்வையாளர் கேலரி அமைந்து உள்ள பகுதியில் அவருக்கு சிலை வைக்க மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. இதையடுத்து அங்கு டெண்டுல்கரின் முழு உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலம் அகமதுநகரை சேர்ந்த பிரபல சிற்ப கலைஞர் பிரமோத் காம்ளே அந்த சிலையை வடிவமைத்துள்ளார்.
வான்கடே ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள டெண்டுல்கர் சிலை இன்று திறந்து வைக்கப்படுகிறது.
சிலை திறப்பு விழாவில் டெண்டுல்கர், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி அஜித்பவார் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.
- பவர் பிளேயில் சேவாக் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த காலம் அது.
- சேவாக் பிறந்தாளுக்கு சச்சின் டெண்டுல்கர் வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களாக வலம் வந்தவர்கள் சச்சின், சேவாக். இருவரும் களத்தில் நின்றால் அனல் பறக்கும். தொடக்க ஆட்டக்காரர்களாக இருவரும் பல சாதனைகளை படைத்துள்ளனர். பவர் பிளேயில் சேவாக் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த காலம் அது.
இரட்டை சதத்தை இன்று பலர் அடித்தாலும் அதனை முதலில் தொடங்கி வைத்தவர்கள் இவர்கள் இரண்டு பேரும்தான். முதல் இரட்டை சதத்தை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சச்சின் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து சேவாக் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
இந்நிலையில் அதிரடி நாயகனாக சேவாக் பிறந்தாளுக்கு சச்சின் டெண்டுல்கர் வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் கூறியிருப்பதாவது:-
நான் ஒருமுறை பொறுமையாக விளையாடும்படி கூறினேன். "சரி" என்று சொல்லிவிட்டு அடுத்த பந்தை பவுண்டரிக்கு அடித்தார். நான் சொல்வதற்கு நேர்மாறாக செய்ய விரும்பும் மனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனவே, தயவுசெய்து ஒரு சலிப்பான பிறந்தநாளைக் கொண்டாடுங்கள் விரு.
இவ்வாறு அவர் கூறினார்.
When I once told him to go slow and stay on the crease, he said, "ok" and then smashed the very next ball for four. Happy birthday to the man who likes to do exactly the opposite of what I say.
— Sachin Tendulkar (@sachin_rt) October 20, 2023
So, I am going to say, please have a boring birthday, Viru. ? pic.twitter.com/i45fSXvvtV
- ஆப்கானிஸ்தான் அணியிடமிருந்து அற்புதமான ஆல் ரவுண்ட் செயல்பாடுகள் வெளிப்பட்டன.
- களத்தில் சிறந்த ஆற்றலுடன் ஆப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடியது.
புதுடெல்லி:
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நேற்று டெல்லியில் நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது. அந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 49.5 ஓவர்களில் 284 ரன்கள் சேர்த்தது.
அதைத் தொடர்ந்து 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி வெறும் 40.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்தது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் பந்து பிட்ச்சில் எப்படி சுழல்கிறது என்று பார்த்து விளையாடிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அது எப்படி ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர்களின் கைகளிலிருந்து வருகிறது என்பதை பார்க்காமல் விளையாடியதே தோல்விக்கான காரணம் என்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஆப்கானிஸ்தான் அணியிடமிருந்து அற்புதமான ஆல் ரவுண்ட் செயல்பாடுகள் வெளிப்பட்டன. குறிப்பாக ரஹ்மதுல்லா குர்பாஸ் திடமான இன்னிங்ஸ் விளையாடினார். இங்கிலாந்துக்கு இது மோசமான நாள்.
எப்போதுமே தரமான ஸ்பின்னர்கள் பந்து வீசும்போது பந்துகளை நீங்கள் அவர்களுடைய கைகளில் இருந்து வருவதை பார்க்க வேண்டும். ஆனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதனை செய்ய தவறினார்கள்.
மாறாக அவர்கள் அதை பந்து பிட்ச்சில் எப்படி சுழன்று வருகிறது என்று பார்த்து விளையாடினார்கள். அதுவே அவர்களுடைய தோல்விக்கு காரணம் என்று நான் கருதுகிறேன். களத்தில் சிறந்த ஆற்றலுடன் ஆப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடியது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சச்சின் டெண்டுல்கர் ஆறு முறை விளையாடி இருக்கிறார்.
- 2011 உலகக் கோப்பையை வென்றது தான் மிகவும் பெருமை மிக்க தருணம்.
ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடரின் சர்வதேச தூதராக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்து இருக்கிறது. இன்னும், சில தினங்களில் 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் ஐ.சி.சி. இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆறு முறை தேசத்திற்காக களமிறங்கி, விளையாடி இருக்கும் சச்சின் டெண்டுல்கர், 2023 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஆண்கள் உலகக் கோப்பையுடன் நடந்து வரவிருக்கிறார்.
சர்வதேச தூதராக அறிவிக்கப்பட்டு இருப்பது குறித்து கருத்து தெரிவித்து இருக்கும் சச்சின் டெண்டுல்கர், "1987-ல் பால் பாய்-ஆக இருந்து தேசத்திற்காக ஆறு முறை உலகக் கோப்பை தொடரில் விளையாடி இருக்கிறேன். என் மனதில் உலகக் கோப்பைகளுக்கு எப்போதும் சிறப்பான இடம் உண்டு."
"எனது கிரிக்கெட் பயணத்தில் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது தான் மிகவும் பெருமை மிக்க தருணம். பல்வேறு விசேஷ அணிகள், தலைசிறந்த வீரர்கள் ஐ.சி.சி. ஆண்கள் உலகக் கோப்பை 2023 தொடரில் கடுமையாக போராட இருக்கின்றனர். இந்தியாவில் நடைபெறும் இந்த தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்று தெரிவித்து உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்